மகாதீர்: வெற்றிக்காகப் பாடுபடுவோம்

கோலாலம்பூர்: நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டு பாடுபடுவோம். நமது முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம். நாம் ஒவ்வொருவரும் பெறும் வெற்றிதான் மலேசியாவின் வெற்றிக்கு நாம் அளிக்கும் பங்காகும். அதே வேளையில் நாட்டின் வெற்றியில் நாம் அனைவரும் பயனடைவோம் என்று மலேசியப் பிரதமர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 80,000 பேர் முன்னிலையில் உரையாற்றிய அவர், நமது புத்தாண்டுத் தீர்மானம் கடினமாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் நாம் அனைவரும் முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மலேசிய மக்களிடம் கேட்டுக்கொண்டார். 2019ல் மக்கள் பல பிரச்சினைகள் குறித்து மனநிறைவற்ற நிலையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அரசாங்கம் மக்கள் மனநிறைவு அடையும் வகையில் அவர்களுடைய பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும். அத்துடன் மலேசியாவின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடரும் என்றார். அம்பாங்2020@கோலாலம்பூர் என்னும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!