மலேசியாவில் சாலைக் கட்டணம் குறையலாம்

கோலாலம்பூர்: மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அந்நாட்டின் பெருவிரைவுச் சாலைகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது.

அதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

குறிப்பாக 772 கி.மீ. தூரத்தைக் கொண்ட வடக்கு-தெற்கு பெருவிரைவுச்சாலை உள்ளிட்ட ஐந்து பெருவிரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்திற்கான சலுகை காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக கட்டணத்தைக் குறைப்பதற்கு மலேசிய அரசு திட்டமிடுகிறது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பெருவிரைவுச் சாலை பராமரிப்பு மற்றும் சுங்க வரி வசூல், சில மாதங்களுக்கு முன் தனியார்மயப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் பெருவிரைவுச்சாலைப் பராமரிப்பை அரசாங்கமே தன் வசம் வைத்துக்கொண்டு, சலுகைக் காலத்தைக் கூட்டுவதன் மூலம் சாலைக்கட்டணத்தைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சாலைக்கட்டணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிதியமையச்சர் லிம் குவான் எங், வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் 18% சாலை சுங்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!