‘மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்க ஐந்து பரிந்துரைகள் கிடைத்தன’

லங்காவி: கடுமையான நிதிப் பிரச்சினைகளால் சிக்கியுள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க, ஐந்து பரிந்துரைகள் கிடைத்திருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். எனினும், அவற்றுள் சில பரிந்துரைகள் பயனற்றவை என்றார் அவர்.

அனைத்துத் தரப்பையும் கலந்து ஆலோசித்து, இதற்குச் சிறந்த தீர்வு என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்று அவர் நேற்று கூறினார்.

2014ஆம் ஆண்டில் மலேசிய ஏர்லைன்சின் எம்எச்370 பயணிகள் விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது. அதே ஆண்டில் எம்எச்17 பயணிகள் விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டு அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

உலக கவனத்தை ஈர்த்த அவ்விரு சம்பவங்களுக்குப் பிறகு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு நிதிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டது.

அந்தப் பிரச்சினைகளிலிருந்து அந்நிறுவனத்தை மீட்டெடுக்க மலேசிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!