இரண்டு வயது மகள் கொலை: பெண் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: தமது இரண்டு வயது மகளைக் கொலை செய்ததாக 22 வயதுப் பெண் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நூருல் ஷமீரா மஸ்லான் எனும் ஒற்றைப் பெற்றோரான அந்த மலேசியப் பெண் அவரது ஒரே குழந்தையான நூர் ஷஹானா அப்துஸ் குத்துஸை, வேண்டுமென்றே தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் இம்மாதம் 13ஆம் தேதி குழந்தை இறந்து போனது. குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு மருத்துவமனையின் சார்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.

நூருல் ஷமீராவும் அவரது 33 வயதான ஆண் நண்பரும் ஜனவரி 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் ஆண் நண்பர், வழக்கில் சாட்சியாகப் பங்கெடுப்பார் என்று ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!