சீனாவிலிருந்து 40 மலேசிய மாணவர்கள் நாடு திரும்பினர்

சீனாவில் பயின்றுவரும் கிட்டத்தட்ட 40 மலேசிய மாணவர்கள் அண்மையில் நாடு திரும்பினர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்படாவிடினும் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பெய்ஜிங்கில் படித்து வருவதாகக் கூறப்பட்டது.

நாடு திரும்பியதும் அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

“இதுவரையிலும், சீனாவிலிருந்து திரும்பிய அந்த மாணவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையுடன் உள்ளனர்,” என அமைச்சு குறிப்பிட்டது.

மலேசியாவில் இதுவரை எட்டுப் பேருக்கு வூஹான் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

ஹுபெய் மாநிலத்தில் இருக்கும் 117 மாணவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#வூஹான் #தமிழ்முரசு #மலேசியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!