கோலாலம்பூர்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டிஏபியின் மலாக்கா உறுப்பினர் வி.சுரேஷ்குமாருக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சொஸ்மா சட்டத்தின் 13வது விதியின் படி பிணை மறுக்கப்படுவதாக நீதிபதி சுட்டினார்.
சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் யு.எஸ். சுப்ராவுக்கும் இந்த வார தொடக்கத்தில் பிணை மறுக்கப்பட்டது.