பத்துமலை விவகாரம்; மலேசிய குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

கொம்பாக்: பத்து மலையில் சட்ட விரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை சுட்டிக்காட்டியுள்ள குடிநுழைவுத் துறை, தங்களுடைய கடமையை செய்யவிடாமல் அதிகாரி களைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையிடம் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை புகார் அளிக்க இருப்பதாகவும் குடிநுழைவுத் துறைஇயக்குநர் ஜெனரல் கைருல் சைமி தாவூத் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் எதிர்ப்புகளால் மிரண்டுவிடவில்லை. சம்பவத்தின்போது தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு நிலைமை மோசமடைய விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்இருந்து வந்துள்ள சிலர் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது அதிகாரிகளை சூழ்ந்து ஒரு கும்பல் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கும் கும்பலுக்கும் இைடயே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நிலைமை மோசமானது. இதனால் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று கொம்பாக் போலிசார் தெரிவித்தனர்.

ஆனால் விசாரித்து, குற்றச் செயல் கும்பலின் வேலையாக இருந் தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் அரிஃபாய் டராவே கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!