சரவாக்கில் மேலும் ஐவருக்கு கிருமித்தொற்று பரிசோதனை

மலேசியாவின் சரவாக்கில் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்காக மேலும் ஐவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து நோயாளிகளும் சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சரவாக் பேரிடர் நிர்வாகக் குழுவின் அலுவலகம் தெரிவித்தது.

இதனையடுத்து, சரவாக்கில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சந்தேகத்தில் மொத்தம் 97 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 74 பேர் மலேசியர்கள்; 20 பேர் சீன நாட்டவர்; ஒரு இந்தோனீசியர்; ஒரு கனடியர்; ஒரு தாய்லாந்து நாட்டவர்.

நிலம், கடல், வான் வழியாக சரவாக்குக்குள் வந்த சுமார் 119,000 பேரை கிருமித்தொற்று அறிகுறிகளுக்காக சரவாக் சுகாதாரத் துறை பரிசோதித்துள்ளது.

இதுவரை சரவாக்கில் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சரவாக் #கொரோனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!