கோலாலம்பூர்: மலேசியாவின் ஜாலான் அப்துல்லாவில் கட்டப்படவுள்ள 32 மாடி கட்டடம் ஏற்கெனவே அங்கிருக்கும் தங்கள் வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அப்பகுதி குடியிருப்பாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1930களில் கட்டப்பட்ட தங்களது குடியிருப்புகளுக்கு புதிய அடுக்குமாடி கட்டடத்தால் பாதிப்பு ஏற்படலாம் என்றார் குடியிருப்பாளரான
டி.க்ஷர்மினி. மேலும் இந்த திட்டம் தொடர்பாக குடியிருப் பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.
"இந்த நிலத்தை தற்போது ஆக்கிரமித்துள்ள குத்தகைதாரர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்யப்போவதாக எங்களிடம் கூறியபோதுதான் இந்த திட்டத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிந்தது," என்றார் க்ஷர்மினி.