மலேசிய கல்வியாளர், எழுத்தாளர் கே.எஸ்.மணியம் மறைவு

மலேசியாவின் கல்வியாளரும் எழுத்தாளருமான கே.எஸ்.மணியம் (சுப்பிரமணியம் கிருஷ்ணன்) நேற்று (பிப்ரவரி 19) புதன்கிழமை பிற்பகலில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

அவருக்கு வயது 78. புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

கெடாவிலுள்ள பெடோங் கெனும் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர் திரு மணியம்.

சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற பல பரிமாணங்களில் எழுதிய திரு மணியம், மலேசிய இந்தியர் சமூகத்தைப் பற்றி தமது படைப்புகளில் எழுதினார்.

அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் இருந்தன. மலேசிய இந்தியர்களிடையே நன்கு அறியப்பட்ட எழுத்தாளராகத் திகழ்ந்தார் திரு மணியம்.

தமது 22வது வயதில் முதல் படைப்பை வெளியிட்ட திரு மணியம், தென்கிழக்கு ஆசியாவில் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் 'ராஜா ராவ்' விருதை வென்றவராவார்.

அவரது ஆங்கில எழுத்துகளையும் படைப்புகளையும் மலேசிய இலக்கியக் குழு ஒன்று தமிழில் மொழிபெயர்த்தது.

திரு கே.எஸ்.மணியத்தின் படைப்புகளை எழுத்தாளர் விஜயலட்சுமி தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தினார்.

#மலேசியா #KSManiyam #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!