பதவி விலகல் கடிதம் அனுப்பிய மகாதீர்; பெரும்பான்மையை இழந்தது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி

மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது பதவி விலகல் கடிதத்தை அரசரிடம் இன்று (பிப்ரவரி 24) சமர்ப்பித்துள்ளார். மேலும், பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டாக்டர் மகாதீரின் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்தது.

திரு அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி தனிக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சருமான திரு அஸ்மின் அலி, வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சரான ஸுரைடா கமாருதின் ஆகியோரின் தலைமையில், அவர்கள் உட்பட 11 பேர் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறினர்.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

டாக்டர் மகாதீரின் அதிரடி பதவி விலகலை அடுத்து, தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடையும்வரை டாக்டர் மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

பிரதமராகப் பதவியேற்ற ஈராண்டுகளுக்குப் பிறகு டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியை திரு அன்வாருக்கு வழங்கவேண்டும் என்று தேர்தல் சமயத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை முறிக்கும் பொருட்டு இந்த பதவி விலகல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

“நாடாளுமன்றத்தில் டாக்டர் மகாதீருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அவரது பதவி விலகலை மாமன்னர் நிராகரிப்பார்,” என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், டாக்டர் மகாதீரின் பதவிவிலகலை மாமன்னர் ஏற்பாரா அல்லது அவரைத் தொடர்ந்து பதவியில் இருக்குமாறு கேட்டுக்கொள்வாரா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திரு அன்வார் இப்ராகிம் தமது துணைவியாரும் மலேசியாவின் துணைப் பிரதமருமான திருமதி வான் அஸிஸாவுடன் மலேசிய மாமன்னரைச் சந்தித்தனர்.

சுமார் 45 நிமிடங்களுக்கு நீடித்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அவர்கள் மாமன்னருடன் மேற்கொண்ட உரையாடல் குறித்த தாகவல்கள் இல்லை; செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவில்லை.

இன்று மாலை 5 மணியளவில் டாக்டர் மகாதீர் மாமன்னரைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது.

#மலேசியா #மகாதீர் #அன்வார் #பக்கத்தான்ஹரப்பான் #பதவி விலகல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!