‘சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை இருந்தால் தொடரலாம்’

சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசியர்கள் தொடர்ந்து இங்கு வேலை செய்யலாம் என்று வெளியுறவு அமைச்சு இன்று (மார்ச் 20) தெரிவித்தது.

இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

மலேசியாவில் புதன்கிழமை (மார்ச் 18) முதல் நடப்புக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன், மலேசியாவின் மூத்த அமைச்சர் மற்றும் தற்காப்பு அமைச்சரான இஸ்மைல் சப்ரி யாக்கோப்புடன் தொலைபேசியில் பேசியதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.

இரு நாட்டு மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படாத அதே வேளையில் நிறுவனங்கள், ஊழியர்கள், குடிமக்கள் ஆகிய மூன்று குழுக்களுக்கும் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதை இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

#சிங்கப்பூர் #மலேசியா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!