கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மற்றும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் சட்டதிட்டங்களை மீறியதாகவும் அதற்காக அவர்களை பெர்சத்து கட்சியில் இருந்து விலக்குவது சரியென்றும் பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
“அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை, அவர்களின் நடவடிக்கைகள் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்பதால் அவர்கள் உறுப்பியத்தை இழந்துவிட்டனர்,” என்று பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் கூறினார்.
“பக்கத்தான் ஹரப்பானுடன் கட்சி முடிவு தொடர்ந்து செயல்பட வேண்டாமென்று முடிவெடுத்துள்ள போதும் மகாதீரும் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றனர்.
“அதுதான் முடிவென்றால், மகாதீருக்கு என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
மே 18ஆம் தேதியன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மகாதீரும் அவரது ஆதரவாளர்களும் பெர்சத்துவின் எதிர்க்கட்சியோடு அமர்ந்திருந்ததால் அவர்கள் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மே 29ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.