அடுத்த தேர்தலுக்கு நாங்கள் தயார்: சாஹிட்

மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலுக்கு அம்னோ கட்சி தயாராக இருப்பதாக அதன் தலைவர் அகமது சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் அரசியல் குழப்பம் பெருகிவரும் நிலையில் திரு சாஹிட், இதை தமது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார்.

நேற்று திரு நஜிப்பை அவரது வீட்டில் காணச் சென்ற திரு சாஹிட், தாங்கள் இருவரையும் ஒன்றாகக் காட்டும் படம் ஒன்றை தமது பதிவில் இணைத்தார்.

அண்மைய நாள்வரை எதிர்க்கட்சியாக இருந்த அம்னோ, தற்போது ஆளும் கூட்டணியான பெரிக்கட்டான் நேசலின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் பாஸ்,பிரிபூமி பெர்சாத்து, கெஅடிலான் ராக்யாட் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தாம் பெர்சாத்து கட்சியின் தலைவர் எனத் தொடர்ந்து சாதித்து வருகிறார். அதன் தற்போதைய தலைவர் முகைதீன் யாசின் தம்மை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரமற்றவர் என டாக்டர் மகாதீர் சாடியுள்ளார். இது அக்கட்சியின் பிளவுக்கான முக்கிய அறிகுறியாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!