கொவிட்-19 பரிசோதனை, இல்லத் தனிமை ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடும் என்றும் அதேபோல மலேசியர்களுக்கும் பரஸ்பர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியிருக்கும் என்றும் மலேசியா கூறியுள்ளது.
சிங்கப்பூர், புருணை ஆகிய நாடுகளின் குடிமக்கள் மலேசியாவுக்குள் கட்டுப்பாடுகளின்றி நுழைய அனுமதிக்கப்படும்போது அவ்விரு நாடுகளுக்குள் நுழையும் மலேசியர்களுக்கும் அதேபோன்ற நீக்குப்போக்கு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூரும் புருணையும் பச்சை மண்டலங்களாக மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதால் புதிய ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இருப்பினும் இந்த அம்சத்தில் சிங்கப்பூரின் நிலை என்னவென்பது மலேசிய, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது என்றும் திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக வேறொரு செய்தியாளர் கூட்டத்தில் மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரி வித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online