அம்னோ: இரண்டு வாரங்களில் தொகுதி பங்கீடு

கோலாலம்பூர்: சாபா சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி, சாபா மாநில சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றார் சாபா மாநில அம்னோ தலைவர் புங் மொக்தார்.

"தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அம்னோவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மற்ற கட்சிகளிடம் வலியுறுத்துவோம், ஏனெனில் எங்கள் கட்சி வலுவானது,” என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், சாபாவின் முன்னாள் முதல்வரான மூசா அமான் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை என்று வெளியான செய்தி போலியானது என்றும் தனக்கும் மூசா அமானுக்கும் இடையில் பகைமையை உருவாக்குவதற்காகப் பரப்பப்பட்ட செய்தி அது என்றும் அவர் சொன்னார்.

முன்னதாக சாபா தேர்தலில் பெர்சத்துக் கட்சி 45 இடங்களில் போட்டியிடும் என்று சாபா பெர்சத்துவின் தலைவர் ஹாஜி நூர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

சாபாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதால், அதன் முதல்வர் ஷாஃபி சட்டமன்ற கலைப்புக்குப் பரிந்துரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!