மலேசிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மின் சிகரெட்டால் புகைப்பிடித்துக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் தற்போது வலம் வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது திரு ஹிஷாமுடின், தாம் அணிந்திருந்த முகக்கவசத்திற்குள் மின் சிகரெட்டை மறைத்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததை அந்த எட்டு நிமிட காணொளி காட்டுகிறது. இந்தக் காணொளி ஆகஸ்ட் 3ஆம் தேதி எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இது குறித்து திரு ஹிஷாமுடின் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு புகைப்பிடிக்க புதிதாகப் பழகிக்கொண்டதாகத் திரு ஹிஷாமுடின், நாடாளுமன்றக் கூட்டங்களின்போது இனி இவ்வாறு புகைப்பிடிக்கப்போவதில்லை எனக் கூறினார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் புகைப்பிடிப்பது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.