இந்தியர்களுக்கு புதிய குடிநுழைவுக் கட்டுப்பாட்டை அறிவித்த மலேசியா

இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீண்டகால குடிநுழைவு அனுமதி அட்டை வைத்திருப்போருக்கு மலேசியாவுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய குடிநுழைவுக் கட்டுப்பாடு இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக்கோப் இன்று தெரிவித்தார்.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குள் வருவதை இந்த நடவடிக்கை தடுக்கும் என்றார் அவர்.

புதிய கட்டுப்பாட்டின்கீழ் இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலேசிய நிரந்தரவாசிகள், ‘மலேசியா என் இரண்டாவது வீடு’ எனும் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள், மலேசியாவில் வேலை செய்யும் நிபுணர்கள், மலேசியரைக் கணவன் அல்லது மனைவியாகக் கொண்டிருப்பவர் ஆகியோர் மலேசியாவுக்குச் செல்ல முடியாது.

குறிப்பிட்ட சில நாடுகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பை மலேசிய அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று திரு இஸ்மாயில் தெரிவித்தார்.

மற்ற நாடுகளிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் அவற்றுக்கும் அதே கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படக்கூடும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!