மலேசியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் சிங்கப்பூருடனான எல்லை திறக்க பேச்சுவார்த்தை

மலேசியாவில் அண்மைய நாட்களில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், சிங்கப்பூருடனான எல்லையத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தையை மலேசிய அரசாங்கம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

“பொருளியல் நடவடிக்கை மன்ற வாராந்திர கூட்டங்களில் இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. கொவிட்-19 சூழல் மற்றும் எல்லை மூடல் காரணமாக பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுப்பயணத் துறை பற்றி கடந்த கூட்டத்தில் பேசப்பட்டது,” என்று பொருளியல் விவாகரங்களுக்கான அமைச்சர் முஸ்தஃபா முகமது கூறினார்.

“மலேசியா வெளிநாட்டு சுற்றுப் பயணிகளில் பாதியை இழந்திருக்கிறது; அவர்களில் 50 விழுக்காட்டினர் சிங்கப்பூரிலிருந்து வருவோர்,” என்றார் அவர்.

சிங்கப்பூருடனான இரண்டு இணைப்புப் பாதைகளையும் திறந்துவிடுமாறு ஜோகூர் மாநில அமைச்சர்கள், மலேசிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பல ஜோகூர்வாசிகள் சிங்கப்பூரில் பணிபுரிவோர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இன்று 293 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின; நேற்றைய எண்ணிக்கையான 317ஐவிட இது சற்று குறைவு.

பெரும்பாலான சம்பவங்கள் சாபா, கெடா மாநிலங்களில் பதிவாகியுள்ளன.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!