மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நிகழும்?

நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த மாமன்னரின் அனுமதி வேண்டி மத்திய அரசு காத்திருக்கிறது.

மலேசியாவில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
மலேசிய நாடாளுமன்றம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதுடன் இடைக்கால மற்றும் பொதுத் தேர்தல் தள்ளிவைக்கப்படும். வழக்கமானதல்லாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.

அவசரநிலையை யார் அறிவிப்பது?
பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில், அவசர நிலை ஏற்பட்டிருப்பதாக மாமன்னர் திருப்தியடைந்த பிறகு அவசரநிலை அறிவிக்கப்படலாம். நாட்டின் பாதுகாப்பு, பொருளியல், பொது ஒழுங்கு போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் நிலவும்போது அவசரநிலை அறிவிக்கப்படலாம்.

இந்த அவசரநிலை எவ்வாறு நடைமுறையில் இருக்கும்?
நாட்டின் அரசியலில் ஏற்படும் மாற்றங்களால் கொவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் செலவு செய்வதற்கு குந்தகம் நேராமல் இருக்கும் பொருட்டு பிரதமர் முகைதீன் யாசின் கோரும் “பொருளியல் அவசரநிலை” உறுதிப்படுத்தும். சாலைகளில் பாதுகாப்புக்காக ராணுவம் நிறுத்தப்படாது. வர்த்தகங்களை மக்கள் வழக்கம்போல் செயல்படுத்தலாம்.

இப்போது “பொருளியல் அவசரநிலை” நடைமுறைப்படுத்தப்பட்டால், அது, 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக்கலவரத்தின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலையிலிருந்து மாறுபட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!