ஜோகூர் பாரு மாவட்டத்தில் கடந்த 14 நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஐக் கடந்திருப்பதால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக நேற்று (அக்டோபர் 29) அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தடும் என ஜோகூரின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வைத்தியநாதன் கூறினார்.
பெரும்பாலும் வீடுகளிலும் வேலையிடங்களிலும் பரவல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் வீட்டு கண்காணிப்பு ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் இன்று தெரிவித்தார்.
நேற்று பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 9 ஏற்கெனவே கிருமித்தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பதிவானது. ஒன்று மட்டும் மற்ற பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.
தற்போது ஜோகூரில் பாயு, கெம்பாஸ், ரின்டிங் என மூன்று கிருமித்தொற்று குழுமங்கள் இருப்பதாக திரு வைத்தியநாதன் கூறினார்.