மலேசியாவில் வெங்காய மூட்டைகளை லஞ்சமாகக் கேட்ட காவல்துறை அதிகாரி கைது

மலேசியாவில் வெங்காய மூட்டைகளை லஞ்சமாகக் கேட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரம்பானில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேசிய சிரம்பான் உதவி ஆணையர் முஹமட் சையது இப்ராஹிம், “புகார் வந்ததைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி அன்று செனாவாங்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்,” என்றார்.

செனவாங் சாலைக்கட்டண சாவடியைக் கடந்த பிறகு தமது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாக புகாரில் லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.

“அப்போது ஒரு போலிஸ்காரர், ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளார். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் இரண்டு வெங்காய மூட்டைகளை அவர் இறக்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்,” என்று உதவி ஆணையர் கூறினார்.

சந்தேக நபரிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தச் சம்பவம் நவம்பர் 29ஆம் தேதி நடந்ததாக அறியப்படுகிறது. இதற்கு மறுநாள் ஷா ஆலம் போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!