மலேசிய நாடாளு மன்றத்தில் தண்ணீர் தெளிப்பானிலிருந்து தவறுலாக தண்ணீர் வெளியேறியதால் உறுப்பினர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ பரவுவதைத் தடுப்பதற்காக தண்ணீர் தெளிப்பான்கள் வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் தவறான சமிக்ஞை காரணமாக நேற்று நாடாளுமன்றத்தில் தெளிப்பானிலிருந்து தண்ணீர் கொட்டியது.
இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹாருன், தற்காலிகமாக கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
இதனால் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா, அமைச்சர் ஹலிமா முஹமட் சாதிக், துணை சபாநாயகர் முஹமட் ரஷீத் ஹஸ்னான் உட்பட பலர் வெளியே காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் அதாவது 10.30 மணி அளவில் உறுப்பினர்களை அழைக்கும் வகையில் மணி ஒலித்தது. இதையடுத்து அனைவரும் மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர்.