சிங்கப்பூரில் தவிக்கும் மலேசியர்களுக்கு உதவ ஆயிரம் உணவுக் கூடைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முஹமது நேற்று மீண்டும் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆனால் வாடகை அதிகமாக இருப்பதால் இருப்பிடம் கிடைக்காமல் அவர்கள் தவிப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜோகூர் முதல்வரின் உணவுக் கூடை திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. படம்: ஹஸ்னி முகமது ஃபேஸ்புக்