மலேசியா: குனுங் செரோ ஸ்ரீ சுப்ரமணியர் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து

மலேசியாவின் குனுங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் கோயிலில் இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டிருப்பதால், அந்தக் கோயிலில் தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகாநந்தா தெரிவித்துள்ளார்.

தைப்பூசம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு போலிசார் அறிவுறுத்தி இருப்பதாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பால்குடம், காவடி, மொட்டை போடுதல், ரத ஊர்வலம், அன்னதானம், அங்கப்பிரதட்சணம் என எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதுடன் கோயிலுக்கு அருகில் எந்தக் கடையும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சிறிய அளவில் தைப்பூச வழிபாடுகள் மட்டும் இடம்பெறும் என்றும் கடந்த வாரம் திரு விவேகாநந்தா தெரிவித்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!