மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 96 தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்

மலேசியாவில் 96 தனியார் மருத்துவமனைகள் கொவிட்-19க்கு சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளன.

சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.

“இந்த 96 மருத்துவமனைகள் 1,252 படுக்கைகள், 65 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 54 சுவாச ஆதரவு கருவிகள் போன்றவற்றை அளிக்கும். அரசாங்கத் துறைகள், பொது பல்கலைக்கழகங்களில் உள்ள பரிசோதனைக் கூடங்களை பெருமளவிலான கொவிட்-19 பரிசோதனைக்காக அரசாங்கம் பயன்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல அரசாங்கக் கட்டடங்கள் கொவிட்-19க்கான எச்சில், சளி மாதிரிகளை எடுக்கும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும் கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக் கட்டணம் பற்றி நிதி அமைச்சு, பேங்க் நெகரா மலேசியா, காப்பீட்டுத் துறை போன்றவற்றுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!