வெளிநாட்டு ஊழியர்களை ஹோட்டலில் தங்கவைக்க மலேசியா ஏற்பாடு

மலே­சி­யா­வில் மோச­ம­டைந்து வரும் கொவிட்-19 நோய்ப் பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைத் தற்­கா­லி­க­மாக ஹோட்­ட­லில் தங்­க­வைக்­கும் தேசிய அள­வி­லான திட்­டம் ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது. ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­கள் சம்­பந்­தப்­பட்ட வேலை­யி­டங்­களில் நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்த இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுற்­றுப்­ப­யண, கலை­கள், கலாசா­ரத் ­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நோய்ப் பர­வல் சூழ­லால் வரு­மா­னம் இழந்து தவிக்­கும் ஹோட்­டல் துறைக்கு இந்த ஏற்­பாடு புத்­து­யி­ரூட்­டும் எனத் தான் நம்­பு­வ­தாக அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

ஊழி­யர் ஒருவரை ஹோட்­டல் அறை­யில் தங்­க­வைப்­ப­தற்­கான மாதக் கட்­ட­ணம் 200 ரிங்­கிட்­டாக (S$65.54) இருக்­கும் என்று அமைச்சு தக­வல் தெரி­வித்­தது. அது­போக மின்­சா­ரம், தண்­ணீர் வச­திக்­கான மாதக் கட்­ட­ணம் 20 ரிங்­கிட்­டாக இருக்­கும்.

சலவை வசதி, உணவு போன்ற இதர வச­தி­க­ளுக்­கான செலவை ஊழி­யரோ முத­லா­ளியோ ஏற்க வேண்­டும் என்று அமைச்சு சொன்­னது.தீப­கற்ப மலே­சியத் தொழி­லாளர் துறை­யு­டன் சேர்ந்து அமைச்சு இந்­த முயற்­சியை முன்­னெ­டுக்­கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த தேசிய பாது­காப்பு மன்ற சிறப்­புக் கூட்­டத்­தின்­போது இது­கு­றித்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது. அதைத் தொடர்ந்து, இந்­தப் பரிந்­து­ரை­கள் குறித்து கருத்­து­களைக் கேட்­ட­றிய இம்­மா­தம் 4ஆம் தேதி ஹோட்­டல், சுற்­றுப்­ப­ய­ணப் பேருந்­துத் துறை பிர­தி­நி­தி­க­ளு­டன் தான் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

மலே­சி­யா­வின் வேலை­யி­டங்­களில் அண்­மை­யில் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் அதி­க­ரித்து இருப்­பது குறித்து சுகா­தா­ரத்­துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கவலை தெரி­வித்து இருந்­தார்.

கடந்த மாதம் 6 முதல் 22ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் பதி­வான 350 கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­களில் 64.3 விழுக்­காடு வேலை­யி­டங்­க­ளு­டன் தொடர்­பானவை என்­றார் அவர்.முன்னதாக, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னைத் திட்­டம் நாட­ள­வில் விரி­வு­படுத்தப்பட இருப்­பதாக மலேசிய மனி­த­வள அமைச்­சர் எம்.சர­வ­ணன் அறிவித்து இருந்தார்.

மலே­சி­யா­வில் பணி­யாற்­றும் ஏறத்­தாழ 800,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இத்­திட்­டத்­தில் உட்­படுத்­தப்­ப­டு­வர் என்று அவர் கூறி இருந்தார். மலே­சி­யா­வில் ஏறக்­குறைய இரண்டு மில்­லி­யன் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சட்ட ரீதி­யாக பணி­யாற்­று­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!