மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது

கொவிட்-19 நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று செர்டாங்கில் உள்ள யுபிஎம் சுங்கச் சாவடிக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.

செர்டாங்கின் மேப்சில் இருக்கும் குறைந்த அபாயமுடையவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

அதில் பயணம் செய்த ஆறு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் சிகிச்சைக்காக மேப்சில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநரின் ஆகியோரின் நிலை பற்றித் தெரியவில்லை.

அந்தப் பேருந்தின் முன்புறம் மிகவும் மோசமாக சேதம் அடைந்திருந்தது. பேராக்கின் சங்காட் ஜோங் கிருமித்தொற்று குழுமத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிக்கொண்டு காலை 10 மணியளவில் பேருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

மேப்சில் இருக்கும் குறைந்த அபாயமுடையவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தை அது பிற்பகல் 1 மணிவாக்கில் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!