மலேசியாவில் இந்தியாவிலுள்ள கொவிட்-19 புதிய கிருமித்தொற்றுடையை ஒருவர்

இந்தியாவில் பரவிவரும் கொவிட்-19 வகை கிருமித்தொற்று உள்ள ஒருவரை மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் விமானச் சேவைகளை புதன்கிழமை (28 ஏப்ரல்) தடை செய்திருப்பதாக மலேசியாவின் சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா இன்று தெரிவித்துள்ளார்.

பி1617 என்ற அந்த வகை கொரோனா கிருமி தொற்றியுள்ள இந்திய நாட்டவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். இந்த புதிய வகை கொவிட்-19 கிருமி, மேலும் விரைவாகப் பரவக் கூடியதாக இருக்கக்கூடும் என்றும் தடுப்பூசிகளை முறியடிக்கும் சக்தியைக் கொண்டிருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

“பொதுமக்களை அமைதியுடன் இருக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கிருமித்தொற்றுத் தொடரை முறியடிப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அனைத்து பொதுச் சுகாதார முயற்சிகள் தொடரும்,” என்று டாக்டர் ஆதாம் தெரிவித்தார்.

இந்நிலையில் மலேசியாவில் கொவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வர அந்நாட்டின் அரசாங்கம், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, ஜோகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!