மலேசியா: 10,000 பேர் நொடித்துப்போயினர்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மார்ச்-ஜூலை மாதங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தபோது, கிட்டத்தட்ட 10,000 பேர் நொடித்துப்போனதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சபி யாக்கோப் தெரிவித்தார்.


அதே காலகட்டத்தில், 1,246 வர்த்தகங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் திரு இஸ்மாயில் கூறினார்.


நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.


“தனிமனிதர்களைப் பொறுத்தமட்டில், மொத்தம் 10,317 பேர் நொடித்துப்போய்விட்டனர்,” என்று பிரதமர் இஸ்மாயில் கூறியுள்ளார். அவர்களில் 2,555 பேர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள்; 1,288 பேர் கூட்டாட்சிப் பகுதியையும் 792 பேர் ஜோகூர் பாருவையும் 628 பேர் பேராக்கையும் சேர்ந்தவர்கள்.

மூடுவிழா கண்ட நிறுவனங்களின் முதலாளிகளுக்கென்று குறிப்பான உதவித்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!