நஜிப் கடப்பிதழ் விடுவிப்பு; பேரப்பிள்ளையைப் பார்க்க சிங்கப்பூர் வருகிறார்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு சிங்கப்பூர் செல்ல மலேசிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1எம்டிபி தொடர்பான வழக்கு விசாரணையில் அவரது கடப்பிதழ் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் மகளுக்குப் பிறக்கும் குழந்தையைப் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று திரு நஜிப் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கமாலுதீன் முஹமட் சையது தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு அவரது கடவுச் சீட்ைட தற்காலிமாக விடுவிக்க உத்தரவிட்டது.

அரசுத் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

“காரணம் நியாயமாக உள்ளது. நஜிப்பின் கடவுச்சீட்டை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது,” என்று நீதிபதி கமாலுதீன் தெரிவித்தார்.

இம்மாதம் 20ஆம் நஜிப்பிடம் கடப்பிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் 3ஆம் தேதி அவர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் நவம்பர் 22ஆம் தேதி அவர் தனது கடப்பிதழை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

திரு நஜிப்புடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் சிங்கப்பூர் வருகிறார்.

திருமதி ரோஸ்மாவும் நீதிமன்றத்திலிருந்து கடப்பிதழை தற்காலிகமாக பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் அவர்களுடைய மகள் நூர்யானா நஜ்வாவுக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது.

இதனால் பேரப் பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் ஆவலுடன் உள்ளனர்.

1எம்டிபியின் பல பில்லியன் டாலர் மோசடி வழக்கில் ஊழல் மற்றும் பணத்தை கையாடியதற்காக கடந்த ஆண்டு நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் தான் தவறு எதுவும் செய்யவில்லை திரு நஜிப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால் அது விசாரணைக்கு வரும்வரை திரு நஜிப் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!