‘பூஸ்டர்’ மேம்பட்ட தடுப்பூசிகளைப் போட ஊக்குவிக்கும் மலேசிய அமைச்சர்

மலேசியாவில் தடுப்பூசி போட்டவர்களும் கொவிட்-19 கிருமிப்பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், பூஸ்டர் எனப்படும் மேம்பட்ட தடுப்பூசிகளைப் போடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசிகளின் சக்தி குறையும் எனத் திரு கைரி தெரிவித்தார். “குறிப்பாக சைனோவேக் தடுப்பூசி, தனது சக்தியை விரைவாக இழக்கிறது. இதனால்தான் பூஸ்டர் தடுப்பூசியைப் பயன்படுத்தும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரில் கொவிட்-19 தொடர்பில் நோயாளிகள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் காட்டும் தரவுகளை திரு கைரி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் சைனோவெக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் புதிதாக 4,854 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நேரத்தில் திரு கைரியின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. இதனுடன் அந்நாட்டின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கையில் 2,586,601 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குர்நர் நுர் ஹிஷாம் தெரிவித்தார். அத்துடன் இன்று 41 பேர் இறந்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!