குறைவான பக்தர்களுடன் மலேசியாவில் தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) நடைபெறுவதை முன்னிட்டு மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர்.

பக்தர்கள் கடந்த வாரயிறுதி முதல் முருகனுக்கு தங்கள் பால் குடக் காணிக்கையைச் செலுத்தி வருகின்றனர்.

பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் காவடி ஊர்வலத்துக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவில், பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில், கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயம் ஆகிய முக்கியமான கோவில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதும்.

ஆனால் கொவிட்-19 நோய்ப்பரவல் இந்நிலையை மாற்றிவிட்டது.

சென்ற ஆண்டு பக்தர்கள் இல்லாமல் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு குறைவானவர்களுக்கே அனுமதி உண்டு.

பத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் எந்த ஒரு நேரத்திலும் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், பலர் கிருமிப் பரவலுக்கு அஞ்சி பத்து மலைக்கு வரவில்லை என்று பக்தர்கள் சிலர் கூறினர்.

அதிகாலையில் கோவிலுக்குச் சென்ற கிருஷ்ணன் கருப்பன், பாதுகாப்பு கருதி தமது பிள்ளைகள் வீட்டிலே இருந்துவிட்டதாகக் கூறினார்.

முன்னெச்செரிக்கையாக, பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது நல்லது என்று ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறினார் அரியேந்திரன் சோமசுந்தரம்.

ஆனால் பல்லாயிரம் பேர் வந்த இடத்தில் பலநூறு பேர்தான் வருவதைப் பார்த்தபோது வருத்தம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (ஜனவரி 17) அதிகாலை பினாங்கில் இரட்டைத் தேர் ஊர்வலம் நடைபெற்றது.

தங்கத் தேர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் கூறியது.

வெள்ளித் தேர் கோவில் வீட்டிலிருந்து 7 மணிக்குப் புறப்பட்டது.

இரண்டும் பின்னர் பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயிலை அடைந்தன.

கடந்த ஆண்டு தேர் ஊர்வலம் நடைபெறாத நிலையில், மழைத் தூரலிலும் தேர்களைப் பார்க்க பலநூறு பேர் வீதிகளில் குழுமியிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!