மலேசியாவில் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக காவடிகளைச் செய்பவர்களுக்கு பெரிய அழப்பு ஏற்பட்டுள்ளது.
தைப்பூசத் திருவிழாவின்போது காவடி ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்று மலேசிய அரசாங்கம் சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது அதற்கு முக்கிய காரணம் என்று காவடி செய்பவர்கள் கூறினார்கள்.
ப்போவில் வசிக்கும் லாரன்ஸ் தேவ், அங்கு தைப்பூச காலத்தில் காவடிகளைத் தயாரிக்கும் சுமார் 50 பேர் தலா 40,000 ரிங்கிட் ($12,890) இழந்துவிட்டதாக மதிப்பிட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
காவடிகள் செய்பவரான பாலசுப்பிரமணியம் பத்துமலை இந்த ஆண்டு 25,000 ரிங்கிட் ($8,000) இழந்துள்ளதாகக் கூறினார்.
அது போக, கடந்த மாதம் முதல் பத்துமலை தேவஸ்தானம் காவடி தொடர்பான முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தது வேறொரு காரணம் என்று பாலசுப்பிரமணியம் பத்துமலை சொன்னார்.
"முதலில், ஜனவரி 15ஆம் தேதிக்கு முன்னர் பக்தர்கள் காவடி எடுத்து காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் கூறியது. பின்னர் காவடிகளுடன் உறுதி மேளம் செல்லத் தடை என்றது. நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம்," என்றார் பாலசுப்பிரமணியம்.
அதனுடன், காவடிக்கான இணைய முன்பதிவு தேதிகளை நிர்வாகம் மாற்றிக்கொண்டே இருந்தது என்று அவர் சொன்னார்.
சில மயில் காவடிகளுக்கு முன்பதிவு செய்த பின்னர், காவடி ஊர்வலம் இல்லை என்ற முடிவை அரசாங்கம் தெரிவித்ததாக பாலசுப்பிரமணியம் கூறினார்.
ஒரு மயில் காவடியைச் செய்ய 7,000 ரிங்கிட் ($2,260) செலவாகும் என்றும் அதற்கு இந்தியாவிலிருந்து அலங்காரப் பொருள்களை வரவழைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தைப்பூசத் திருவிழா காலத்தில் காவடிகள் செய்யும் இவர்கள் பெரும்பாலும் வேறு வேலை செய்பவர்கள்.
சொந்தம் பணம் போட்டு கடந்த சில மாதங்கள் செலவழித்தவர்களால் இப்போது அந்தப் பணத்தை ஈட்டமுடியாது போய் உள்ளது.
கடைசி நேரத்தில் முடிவு எடுக்காமல் முன்கூட்டியே காவடிக்குத் தடையை அறிவித்திருந்தால், இழப்பு ஏற்பட்டிருக்காது என்று லாரன்ஸ் கூறினார்.
பினாங்கு மாநில அரசாங்கம் முன்கூட்டியே காவடிகளுக்கு இல்லை என்று கூறியதால், அங்கு காவடி செய்வோருக்கு அதிக பாதிப்பில்லை என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.