மலேசியாவில் ஒரு முதியவர் தமது வாகன கூரையில் சடலம் இருப்பது தெரியாமல் கிட்டத்தட்ட 400 மீட்டர் வரை வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சாலையில் திரும்பும்போது அதே வழியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை முதியவர் இடித்தார். விபத்து ஏற்படுத்திய தாக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டி வாகனத்தின் மீது தூக்கியேறியப்பட்டார்.
பீதியில் செய்வதறியாமல் வாகனத்தை நிறுத்தாமல் அதை ஓட்டிச்சென்றுள்ளார் அந்த 67 வயது மாது. வாகன கூரையில் சடலம் இருப்பதை அவர் சற்றும் உணரவில்லை. பொதுமக்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வாகனத்தை நிறுத்தச்செய்தனர்
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 26 வயது ஆடவர் என்றும் சுற்றுலாவுக்காக கில்லாங்கிற்கு சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
வாகனம் ஓட்டிய முதியவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலையில் வலையும் முன், முதியவர் வாகனத்தை நிறுத்த தவறியதாகவும், இதனால் மோட்டார் சைக்கிளோட்டி வாகனத்தின் ஒரு புறத்தில் மோதியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
முதியவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, சீறுநீரக சிக்கல் போன்ற மருத்துவ பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
காவல் துறை விபத்தை விசாரித்து வருகிறது.