வாகன கூரையில் சடலத்துடன் வாகனத்தை ஓட்டியவர்

மலேசியாவில் ஒரு முதியவர் தமது வாகன கூரையில் சடலம் இருப்பது தெரியாமல் கிட்டத்தட்ட 400 மீட்டர் வரை வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சாலையில் திரும்பும்போது அதே வழியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை முதியவர் இடித்தார். விபத்து ஏற்படுத்திய தாக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டி வாகனத்தின் மீது தூக்கியேறியப்பட்டார்.

பீதியில் செய்வதறியாமல் வாகனத்தை நிறுத்தாமல் அதை ஓட்டிச்சென்றுள்ளார் அந்த 67 வயது மாது. வாகன கூரையில் சடலம் இருப்பதை அவர் சற்றும் உணரவில்லை. பொதுமக்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து வாகனத்தை நிறுத்தச்செய்தனர்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 26 வயது ஆடவர் என்றும் சுற்றுலாவுக்காக கில்லாங்கிற்கு சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

வாகனம் ஓட்டிய முதியவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சாலையில் வலையும் முன், முதியவர் வாகனத்தை நிறுத்த தவறியதாகவும், இதனால் மோட்டார் சைக்கிளோட்டி வாகனத்தின் ஒரு புறத்தில் மோதியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

முதியவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, சீறுநீரக சிக்கல் போன்ற மருத்துவ பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

காவல் துறை விபத்தை விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!