மலேசியாவில் கட்டப்பட்டுவரும் உலகின் இரண்டாவது ஆக உயரமான கட்டடம் அடுத்தாண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்டேக்கா 118 கோபுரம் 2023ன் நடுப்பகுதியில் கட்டிமுடிக்கப்படும். கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.
மெர்டேக்கா 118 கோபுரத்தின் உயரம் 678.9 மீட்டர். 118 என்பது கட்டடத்தில் அமைந்துள்ள மாடிகளை குறிக்கிறது.
உலகின் ஆக உயரமான கட்டடமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிபா திகழ்கிறது. அதன் உயரம் 830 மீட்டர்.
மெர்டேக்கா 118 கட்டடத்தை கட்டுவதற்கான செலவு கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் ($1.55 பில்லியன்).
தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்த கட்டடம், மெர்டேக்கா விளையாட்டரங்கத்துக்கு அருகில் உள்ளது. 116வது மாடியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து கோலாலம்பூரின் முக்கிய அடையாளங்கள் அனைத்தையும் பார்க்கமுடியும் என்று கூறப்பட்டது.