உலகின் 2வது ஆக உயரமான கட்டடம் அடுத்தாண்டு திறப்பு

மலேசியாவில் கட்டப்பட்டுவரும் உலகின் இரண்டாவது ஆக உயரமான கட்டடம் அடுத்தாண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்டேக்கா 118 கோபுரம் 2023ன் நடுப்பகுதியில் கட்டிமுடிக்கப்படும். கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.

மெர்டேக்கா 118 கோபுரத்தின் உயரம் 678.9 மீட்டர். 118 என்பது கட்டடத்தில் அமைந்துள்ள மாடிகளை குறிக்கிறது.

உலகின் ஆக உயரமான கட்டடமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிபா திகழ்கிறது. அதன் உயரம் 830 மீட்டர்.

மெர்டேக்கா 118 கட்டடத்தை கட்டுவதற்கான செலவு கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் ($1.55 பில்லியன்).

தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்த கட்டடம், மெர்டேக்கா விளையாட்டரங்கத்துக்கு அருகில் உள்ளது. 116வது மாடியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கிருந்து கோலாலம்பூரின் முக்கிய அடையாளங்கள் அனைத்தையும் பார்க்கமுடியும் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!