கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தலை இவ்வாண்டு நடத்த நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அந்நாட்டின் ஆகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோ கூறியுள்ளது.
அதன் தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று (30 செப்டம்பர்) அம்னோ அதன் தலைமையகத்தில் மூன்று முக்கிய கூட்டங்களை நடத்தியது.
அதற்குப் பிறகு அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அந்நாட்டு மாமன்னரைச் சந்திப்பதற்கான தேதியை நாடப்போவதாகவும் அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை முன்வைக்கப்போவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.