நிச்சயமாக மீண்டு வருவேன்

'பீப்' பாடல் விவகாரம் குறித்து நடிகர் சிம்பு தனது டுவிட்டரில் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சிலர் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றாலும் அவற்றில் இருந்து ரசிகர்கள் பெருமைகொள்ளும் விதத்தில் மீண்டு வருவேன். எனக்கு அந்த நம்பிக்கை அதிகம் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார். சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் முன்னோட்ட காட்சிகள் புத்தாண்டில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இணையத்தளத்தில் அந்த முன்னோட்டத்தை இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது சிம்புவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சிம்பு நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்தப் படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளனராம். தற்போதைய சூழ்நிலையில் இந்தப் படத்தின் வசூல் நிச்சயமாக எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் எனப் படத் தயாரிப்புத் தரப்பு கணக்கிட்டுள்ளதாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!