கீர்த்தி: அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது

சுசீந்திரன் இயக்கிய 'அழகர் சாமியின் குதிரை' படத்தில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. பிறகு 'சகாக்கள்', 'கொண்டான் கொடுத்தான்', 'பாண்டியநாடு', 'மாங்கா' படங்களிலும் நடித்தார். எனினும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை. இப்போது 'செவிமி' என்ற படத்தில் நடிக்கிறார். "நான் கன்னட நடிகை என்றாலும், தமிழ் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். அனைத்தும் நல்ல படங்கள். குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நான் எதிர்பார்த்தபடி பிரபலமாக முடியவில்லை. இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

"கவர்ச்சியான வேடத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை. ஆனால் குடும்பப் பாங்கான வேடத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். இதனால் தான் அத்தகைய வேடங்களில் விரும்பி நடிக்கிறேன். இப்போது நான் நடிக்கும் 'செவிலி' படத்திலும் குடும்பப் பாங்கான வேடம்தான். நான் இதுவரை நடித்த பாத்திரங்களில் இது மிகவும் பிடித்தது. "திறமை மட்டும் இருந்தால் போதாது. படமும் நன்றாக ஓடினால்தான் பிரபலமாக முடியும். பெயரும் புகழும் கிடைக்கும். நடிப்புத்திறமை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும்," என்கிறார் கீர்த்தி ஷெட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!