இந்தியாவில் புதிதாக 27 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். 26 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியக் கோடீஸ்வரர்களில் முதல் இடத்திலும் உலகக் கோடீஸ்வரர்களில் 21வது இடத்திலும் உள்ளார். 'ஹருன் குளோப'லின் 2016ஆம் ஆண்டுக்கான கோடீஸ் வரர்கள் பட்டியலின்படி இந்தியா வில் 111 கோடீஸ்வர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் மும்பை யைச் சேர்ந்தவர்கள். இவர்களது மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $308 பில்லியன். கடந்த ஆண்டில் இவர்களின் சொத்துகள் 25% வளர்ச்சி கண்டுள்ளன. உலகளவில் 99 புதிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளனர். 2016ன் மொத்த கோடீஸ்வரர் எண்ணிக்கை 2,188. இது 2013ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 50% அதிகம்.
560 கோடீஸ்வரர்களுடன் சீனா, 535 கோடீஸ்வரர்களை பெற்றுள்ள அமெரிக்காவை முந்திவிட்டது. 'உலகின் கோடீஸ்வரர்கள் தலைநகர'மாகியுள்ளது பெய்ஜிங். சுய உழைப்பில் தலையெடுக்கும் கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனக் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு யுஎஸ் $1.4 டிரில்லியன். இது ஆஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவாகும். அதேநேரத்தில் 'ஹருன்' பட்டியலின்படி ரஷ்ய கோடீஸ்வரர்கள் யுஎஸ் $130 பில்லியனை இழந்துள்ளனர். உலகில் மொத்தம் 729 பேரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. 102 பேர் கோடீஸ்வரர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.