தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-=பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார். "அதிமுக, திமுகவுக்கு மாற் றாக தமிழகத்தில் ஓர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். எனவே, அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை," என்ற தமிழிசை தேமுதிக, பாமகவுடன் பேசி வருவதாக இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலைப்போல வலுவான 3வது அணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளையும் இதில் இணைக்கும் முயற்சி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி?
அதேநேரத்தில், 'கிங் மேக்கராக' இருப்பதைவிட 'கிங்'காக இருக்கவே விரும்பும் விஜயகாந்த் பாஜகவா, மக்கள் நலக்கூட்டணியா என பூவா, தலையா போட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தக வல்கள் கூறுகின்றன. இந்நிலையில், தமாகா தலைவர் வாசன், கடந்த மூன்று நாட்கள் நடத்திய நேர்காணலில் விஜயகாந்த் இடம்பெறும் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இடம் பெறலாமா என்ற கேள்வியையே எழுப்பியுள்ளார். அதற்கு கட்சி பிரமுகர் கள் பலரும் ஆதரவளித்துள்ள னர். எனவே, விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்குத் தலைமை வகித்தால் அக்கூட்டணியில் தமாகா இடம்பெற வாய்ப்புள்ளது.
தமிழிசை செளந்திரராஜன் பிப்ரவரி 16ஆம் தேதி நடந்த தனது மகன் சுகநாதன் திருமணத்திற்கு திருமணப் பத்திரிகை வைத்து அழைத்தபோது. கோப்புப்படம்