சிங்கப்பூரில் சாலைக் கட்டணங்களை வசூலிக்க துணைக் கோளத்தைப் பயன்படுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான மேம்பாட்டுப் பணி களுக்கான ஏலக்குத்தகையை என்சிஎஸ், மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அளித்துள்ளது. $556 மில்லியன் குத்தகை ஒப்பந்தத்தின் மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் தொடங்கும் எனவும் ஆணையம் நேற்று தெரிவித்தது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய துணைக்கோள மின்னியல் சாலைக் கட்டண முறை நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள மின்னியல் சாலைக் கட்டண முறை 1998ல் தொடங்கப்பட்டது. இப்போது அதைப் பராமரிப்பதும் கடினம். அதற்கான செலவுகளும் அதிகரித்துக்கொண்டே உள்ளன என ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்தது. அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை, போக்குவரத்து நெரிசலைக் கண்டறிந்து நிர்வகிக்கவும் வழிவகுக்கும்.