திமுகவில் இணைய நாஞ்சில் சம்பத் முடிவு

சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத் மீண்டும் திமுக வில் இணைய முடிவு செய்தி ருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக, திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பதுக்கு அக்கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதையடுத்து அதிமுகவில் இணைந்த அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வந்தார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில், அண்மையில் தனியார் தொலைகாட்சிக்குப் பேட்டியளித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்தார். எனினும் அவரது இச்செயல்பாடு அதிமுக தலை மைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யதாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. எனினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!