ஸிக்கா நோய்க்கிருமி மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாக கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஸிக்கா நோய்க்கிருமி கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தேசிய சுற்றுப்புற முகவை, தொடர்ந்து அதைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், அந்த நோய்க்கிருமி சிங்கப்பூருக்குள் புகுந்துவிடும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் வாரியமும் சுகாதார அமைச்சும் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கெனவே முடுக்கிவிட்டுள்ள தாக டாக்டர் கோர் சொன்னார். எடுத்துக்காட்டாக, தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் அறி விக்கப்பட வேண்டிய தொற்று நோய்ப் பட்டியலில் ஸிக்கா கிருமித்தொற்றும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
அண்மையில், பிரேசிலில் சிறிய மண்டை ஓட்டுடன் கூடிய தலை, மற்ற நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் அதிகம் பரவு வதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து ஸிக்காவை எதிர்கொள்ளும் வகையில் இன் னும் பல நடவடிக்கைகளை அறி முகப்படுத்தவுள்ளதாகக் கூறி னார் டாக்டர் கோ. ஸிக்கா கிருமித்தொற்று உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதி இன்னும் பல பொது மருத்துவமனை ஆய்வகங்களுக்கு விரிவுபடுத்தப்படும். காய்ச்சல், சிராய்ப்புகள் மற்றும் டெங்கி பாதிப்பு இருக்க லாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் ரத்த மாதிரி களைச் சேகரித்து ஸிக்கா பரிசோதனைக்கும் உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய சுற்றுப் புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.