மானபங்க சம்பவங்களில் 5% ரயில்களில் நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில்களில் சராசரியாக 71 மானபங்க சம்பவங்கள் நிகழ்ந்தன. ரயில்களில் 2013ல் 65, 2014ல் 79, 2015ல் 69 மானபங்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ரயில்களில் எச்சரிக்கைகள், மகளிருக்கு தனி ரயில் பெட்டிகள் போன்ற பரிசீலனைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதிலளித்த திரு அம்ரின், ரயில்களில் நிகழந்த மானபங்க சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இம்மாதிரியான நடவடிக்கைகள் தேவையில்லை என்று கூறினார்.