கடந்த ஆண்டில் உயர்மாடியில் இருந்து குப்பை வீசிய 2,800 புகார்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்தில் பதிவு செய்யப்பட்டதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2014ல் பதிவு செய்யப்பட்ட 2,500 குற்றங்களைவிட இது அதிகம். 2013ல் 1,600 புகார்கள் பதிவாகின. கடந்த ஆண்டில் மேலிருந்து குப்பை வீசப்பட்ட சம்பவங்களால் எவரும் உயிரிழக்கவில்லை. எனினும் சிலர் காயமடைந்துள்ளனர். அதன்தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்பாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கான் தியாம் போவின் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ, இத்தகைய புகார்கள் பதிவாகும் சமயங்களில், சுற்றுப்புற நீர்வள அமைச்சு, நகர மன்றங்கள் அடித்தள அமைப்புகளுடன் இணைந்து மேலிருந்து குப்பை வீசுவதற்கு எதிராக குடியிருப்பாளர்களை எச்சரிக்கும். பெரும்பாலான சம்பவங்களில் அதனை தொடர்ந்து நிலைமை மேம்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.