வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, எளிதில் பாதிப்பிற்கு உள் ளாக வாய்ப்புள்ள பிள்ளைகளுக் கான ஒருங்கிணைந்த பராமரிப்புத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப் படுகிறது. மனிதநேய அமைப்பான லியன் குழுமமும் நல நிறுவனமான கேர் கார்னரும் இணைந்து இரு நிலை யங்களில் நடத்தி வரும் 'பராமரிப்பு வட்டம் (சர்க்கிள் ஆஃப் கேர்)' எனும் அந்த ஒருங்கிணைந்த பராமரிப்புத் திட்டம் இவ்வாண்டு மேலும் ஏழு பாலர் பள்ளிகளிலும் இரு தொடக்கப் பள்ளிகளிலும் அறிமுகம் காணவுள்ளது.
இதற்காக, மை வோர்ல்ட் பாலர் பள்ளி, மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம், சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம், லேக்சைட் தொடக் கப் பள்ளி, கான் எங் செங் தொடக்கப் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக கேர் கார்னரும் லியன் அறநிறு வனமும் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தன. கடந்த 2013ஆம் ஆண்டு இந்த 'பராமரிப்பு வட்டம்' திட்டம் லெங் கீ மற்றும் அட்மிரல்ட்டியில் உள்ள கேர் கார்னர் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் அறி முகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமான தாக இருந்து வருகிறது. இந்தத் திட்டமானது ஆசிரியர்கள், சமு தாய ஊழியர்கள், கல்விப் பணி யாளர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோரைக் கொண்டு குழந்தை களின் பராமரிப்பில் ஒரு முழுமை யான, புதிய, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள்கிறது.
பாலர் பள்ளிக் குழந்தையுடன் விளையாட்டில் ஈடுபடும் சமுதாய ஊழியர். படம்: சர்க்கிள் ஆஃப் கேர், கேர் கார்னர் சிங்கப்பூர்