தவறான தகவல்கள் கொடுத்தது, வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தகுந்த குடியிருப்பு வசதிகள் வழங்காதது ஆகிய குற்றங்களுக்காக இரு கட்டுமான நிறுவனங் களுக்கு $180,000 அபராதம் விதிக்கப்பட்டது. '3எஸ் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்', 'சிங் சாலிட் சர்ஃபேஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகிய இரு நிறுவனங்களும் வெளிநாட்டு ஊழியர்களின் முகவரி தொடர்பாக, மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் சேவைப்பிரிவு இணையத் தளத்தில் தவறான தகவல்களை அளித்ததாகவும் வசதி குறைந்த பாதுகாப்பற்ற இடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வெளிநாட்டு மனிதவள சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட 18 குற்றச் சாட்டுகளையும் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. முப்பது குற்றச் சாட்டுகள் கவனத்தில் கொள்ளப் பட்டன. அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் மனிதவள அமைச்சு தடைவிதித்தது. மேலும் தற்போதைய ஊழியர்களின் வேலை அனுமதி அட்டை களையும் அவை புதுப்பிக்க முடி யாது. 2007 ஜூலை முதல் 2014 ஜூல் வரையிலான காலகட்டத்தில் 'வொர்க் பாஸ்' பிரிவுக்கு தவறான தகவல்களை இந்நிறுவனங்கள் கொடுத்துள்ளன.