லயனல் மெஸ்ஸியும் அவரது பார்சலோனா காற்பந்துக் குழுவும் நேற்று முன்தினம் மட்ரிட்டில் நடந்த ஆட்டத்தில் ராயோ வெலிகனோவை 5=1 என்ற கோல்கணக்கில் வென்று சரித்திரம் படைத்துள்ளனர். தொடர்ந்து 35 ஆட்டங் களில் தோல்விபெறாமல் புதிய ஸ்பானிய சாதனையை பார்சலோனா படைத்துள் ளது. இதன் மூலம் ரியல் மட்ரிட்டின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய சாத னையை பார்சிலோனா குழு முறியடித்துள்ளது. இந்த ஆட்டத்தில் லயனல் மெஸ்ஸி (படத்தில் வலது) தனது சக ஆட்டக்காரர்களான நெய்மார், லுயிஸ் சுவரெஸ் ஆகியோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதற்கு கடுமையாக உழைத்து பார்சிலோனாவின் வெற்றிக்குக் காரணமாயிருந்தார்.
மத்திய திடல் ஆட்டக்காரரான ஐவன் ரகிடிக் ஆட்டத் தின் முதல் கோலைப் போட்டார். தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கோல்களை மெஸ்ஸி போட்டார். இறுதியாக அர்னா துரான் ஆட்டத்தை முடித்து வைத்தார். ராயோ குழுவின் அதிரடி ஆட்டக்காரர் அல்பெர்ட்டோ மனுச்சோ ஒரே ஒரு கோல் போட்டார். லீகில் 11 ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முன்னணியில் உள்ளது.
ஸ்பெயினின் மட்ரிட் நகரின் வேலிகாஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா குழுவும் ராயோ வெலிகானோவும் மோதின. அதில் பார்சிலோனா 5-1 என்றகோல் கணக்கில் வென்றது.