சிங்கப்பூரின் துப்பாக்கி வீராங்கனை ஜாஸ்மின் செர், உலகக் கிண்ணப் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றுள்ளார். பேங்காக்கில் துப்பாக்கி சுடும் விளையாட்டு சம்மேளனத்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்று முன்தினம் செர் வெண்கலப் பதக்கம் வென் றார். 25 வயதான வீராங்கனை செர் மொத்தம் 184.6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித் துள்ளார். இந்தப் போட்டியில் சீனாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனை யி சிலிங் 207.7 புள்ளிகள் எடுத்து முதல் நிலையிலும், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா ஹோல்ப்மண் இரண்டாவது நிலையிலும் வென்றுள்ளனர்.
மற்ற சிங்கப்பூர் வீரர்களான ஹோ ஸியூ யி, 16, இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் நிலையில் இருந்தார். ஜாஸ்மின் செர் நான்காம் நிலையில் இருந்தபோது ஸியூ யி 143.5 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருந்தார். வெண்கலப் பதக்கம் வென்ற ஜாஸ்மின் செர், நாளை நடைபெறவிருக்கும் 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள் வார். இப்போது தாய்லாந்தின் பேங் காக்கில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணப்போட்டி அடுத்து ஏப்ரலில் ரியோ டி ஜனெய்ரோவிலும் மே, ஜூன் மாதங்களில் அஸர்பெய்ஜானின் முனிச், பக்கு நகரங்களிலும் நடைபெறும்.